Amazon

Wednesday, 1 February 2017

வறண்ட பூமியில் சந்தன மரம்

வறண்ட பூமியான சிவகங்கையில் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார் நாட்டரசன்கோட்டை விவசாயி செல்வம்.
அவர் கூறியதாவது: நாட்டரசன்கோட்டை அருகே மாங்காட்டுப்பட்டியில் 10 ஏக்கரில் பரிட்சார்த்தமாக சந்தன மரம் நடும் முயற்சியில் இறங்கினேன். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக இருப்பதால்,தண்ணீரின்றி விவசாயம் செய்வது கடினம். இருப்பினும் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுக்கு முன் ஏக்கருக்கு 300 சந்தன மரக்கன்று வீதம் 3,000 கன்றுகளை நடவு செய்தேன். பெங்களூருவில் இருந்து ஒரு கன்று ரூ.150க்கு வாங்கினேன். 2 ஆண்டு நன்கு பராமரித்து, வளர்ந்த பின் முறையாக தண்ணீர் விட்டும், பூச்சி தாக்காமல் மருந்து தெளித்தால் போதும். 15 முதல் 20 ஆண்டு கழித்து வருவாய்துறை அனுமதியுடன் மரங்கள் வெட்டலாம்.
வளர்ந்த மரங்களில் 30 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எஞ்சிய மரங்களை நாமே விற்கலாம். மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரும் சந்தன மரங்களை வறண்ட சிவகங்கையில் வளர்க்கும் நோக்கில் வளர்க்கிறேன். சந்தன மரங்களை அரியானா, அருணாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி, அங்கு சந்தன தைலம் தயாரிப்பர். அன்றைய அரசு விலை நிர்ணயப்படி பல லட்சம் வருவாய் கிடைக்கும், என்றார்

ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் தரும் கேந்தி மலர் சாகுபடி

“உழுதவன் கணக்கு பார்த்தால் தார் கம்பு கூட மிச்சமாகாது” என்பது கிராமப்புற விவசாயிகள் கூறுவதுண்டு. ஆனால் இவற்றை எல்லாம் பொய்யாக்கி ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் எடுக்கிறேன் என்று கர்வத்துடன் கூறுகிறார் ஒரு சாதனை பெண் விவசாயி சிவகாமி விருமாண்டி.
எப்படி: இவர் வருடந்தோறும் கேந்திமலர் சாகுபடி செய்கிறார். ஈஸ்வெஸ்ட் நிறுவனத்தின் “”மேக்சிமா எல்லோ வீரிய ஒட்டு” என்ற ரகத்தை ஏக்கருக்கு 10 ஆயிரம் செடிகள் நான்கு உழவு முடிந்தவுடன் 2×2 அளவில் பார் அமைத்து நடவு செய்தார். செடி நட்ட 40 நாளில் முதல் அறுவடை வந்தது. பூ வந்த நாள் முதல் 100 நாட்கள் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 10 டன் பூ வந்தது. 1 கிலோ குறைந்த பட்ச விலை ரூ.40. அதிக பட்சம் ரூ.160. இந்த பூக்களுக்கு வருடத்தில் அனைத்து நாட்களிலும் நல்ல வரவேற்புள்ளது.
ஏக்கர் / 4,00,000. (10,000 x 50 = 5,00,000).
வருமானம் – ரூ.5,00,000. செலவு – 1,00,000. நிகர வருமானம் – ரூ.4,00,000.
செலவு: உழவு – 4000, நாற்று (ரூ) 30,000, மருந்து + உரம் – 16,000, கமிஷன் – 50,000, மொத்தம் 1,00,000. இவர்கள் பூப்பறிப்பதற்கு கூலி ஆட்கள் விடுவதில்லை.
இவருக்கு இவர் கணவர் விருமாண்டி D.Agri தொழில்நுட்ப விவரங்களை கற்றுத் தருகிறார். இவர் இந்த செண்டு பூ வீரிய நாற்றுகளை தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்கிறார்

‘மா’வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்

ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை வேளாண்மை செய்து வரும் விவசாயிகள் தனது நிலத்திற்கு “அங்ககச் சான்று’ பெற முன்வர வேண்டும். இந்த உத்தி மூலம் ஏற்றுமதி செய்தும் லாபம் பெற வழி உள்ளது. குறிப்பாக “அல்போன்சர்’ ரகம் காதர் என்றும் குண்டு என்றும் பாதாமி என்றும் அழைக்கப்படும் இந்த ரகம் பிரசித்தி பெற்று நல்ல விலை தருவதால் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் அரசு பழப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கை வேளாண்மை எனும் செலவு குறைந்த உத்தி மூலம் நீண்டகால, நிரந்தர வரவுக்கு வழி உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காது. உடல் நலம் பேணவும், சந்ததியினருக்கு புதுப்புது நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுவதால் எல்லா இடத்திலும் எல்லாப் பயிருக்கும் பலவித உத்திகள் உள்ளதால் நல்ல மகசூல் மட்டுமல்ல. வரவையும் பல மடங்கு அதிகரிக்கலாம்.
இயற்கை வேளாண்மைக்கு உறுதுணையான பல இடுபொருட்களில் உயிர் உரங்கள், மண்புழு உரம், பஞ்சகவ்யா, தக கவ்யா, மண்புழுகுவியல்கள், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோலா, பசுந்தழை உரங்கள், பசுந்தழை உரப்பயிர் பயன்பாடு, பயிர் கழிவுகள் உரமாக்குதல், மிருக கழிவுகள், கம்போஸ்ட் வகைகள் பயன்பாடு பலவித சாம்பல்கள், பலவித பிண்ணாக்கு மற்றும் இலைச்சாறுகள் உள்ளன. இவை தவிர விவசாயிகள் கடைபிடித்திட உதவும் உழவியல் உத்திகளாக பல பயிர் சாகுபடி ஊடுபயிர் சாகுபடி, நிலப்போர்வை உதவும். பசுந்தாள் உரப் பயிர்களான சீமை அகத்தி, சணப்பை தக்கைப்பூண்டு, பில்லிப்பயறு கொளுஞ்சி, அவுரி முதலியவற்றை பயிர் சுழற்சியில் சேர்த்தல் நல்லது.
பசுந்தழைச் செடிகள் கிளைரிசிடியா, ஆவாரை, ஆடாதோடா, எருக்கு மற்றும் மலைப்பூவரசு , பூவரசு மற்றும் புங்கம் மரங்களையும் பயன்படுத்தலாம். தமது தோட்டத்திற்கு தேவையான மண்புழு உரத்தினை அங்கே வளர்க்கப்படும் மிருகங்களான ஆடு, மாடு, குதிரை மற்றும் செம்மறி ஆடு முதலியவற்றில் கழிவுகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கலாம். அங்கே கிடைக்கும் கழிவுகளை மீள் சுழற்சி செய்து பயன்படுத்துவது அற்புத செலவில்லா உத்தியாகும். எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும் பலவித எளிய உத்திகளுடன் ஏற்ற ஊடுபயிர் மற்றும் இணைபயிர் தேர்வு செய்தால் கூடுதல் வரவும் உண்டு. தேனீ வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பும், இதர பறவைகளான கோழி, வாத்து, காடை, வான்கோழி வளர்ப்பதும் வாய்ப்புள்ள தருணம் மேற்கொள்ளலாம்.
பாரம்பரிய உத்திகளில் விதை நேர்த்திக்கு புகையிலைச்சாறு பயன்பாடு, சாணிப்பால் பயன்பாடு செம்மண் கலந்து விதைகளை முலாம் பூசுதல் உரிய பருவம் விதைப்பது, பறவை இருக்கையாக பழைய பானைகள் பயன்பாடு, பொறிப்பயிராக ஆமணக்கு, பொரியல் தட்டை சாகுபடி முதலியன நெடுநாள் முதலாக வழக்கில் உள்ளதால் தேவைப்படும் பகுதிகளில் பயன்படும். மா சாகுபடியில் மேற்கூறியுள்ள உத்திகளில் பலவற்றைக் கடைப்பிடித்தால் உயர் லாபம் பெறலாம்.

இயற்கை முறை நாவல் சாகுபடி

கொடைரோடு மெட்டூரை சேர்ந்த விவசாயி சி.ஐ.ஜெயக்குமார் ஒரு ஏக்கருக்கு நாவல்பழ சாகுபடி செய்தார். 96 மரங்கள் உள்ளன. சாதாரணமாக நாவல் மரங்கள் 30 முதல் 35 அடி வரை வளரும். அவர் ஆண்டுதோறும் கவாத்து செய்வதால் 15 அடி உயரமுள்ள செடிகளாக வளர்ந்துள்ளன. இயற்கை முறையில் உரமிடுகிறார். அசோஸ்பைரில்லம், ரைசோபியம், சூடோமோனாஸ், மாட்டு எலும்பு சாம்பல், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை நுண்ணூட்ட சத்துகளை பயன்படுத்துகிறார். நோய் தாக்குதலை தவிர்க்க இஞ்சிச்சாறு, மஞ்சள் பொடியை பயன்படுத்துகிறார்.
நான்கு ஆண்டுகளில் இருந்து பழம் காய்க்கின்றன. ஒரு மரத்தில் 60 கிலோ வீதம் ஏக்கருக்கு 5.5 டன் கிடைக்கிறது. சாதாரணமாக ஒரு ஏக்கரில் 2 டன் மட்டுமே மகசூல் கிடைக்கும். பழம் 5 கிராம் மட்டுமே இருக்கும். பறிக்கும்போதே பாதி பழங்கள் சேதமாகிவிடும். இங்கு ஒரு பழம் 17 முதல் 20 கிராம் இருக்கிறது. உயரம் குறைவாக இருப்பதால் பழங்களை சேதமின்றி பறிக்கின்றனர்.
விவசாயி கூறியதாவது: ராஜமுந்திரியில் “ஜம்பு’ ரக நாவலை வாங்கி வந்து பயிரிட்டேன். ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவானது. ஒவ்வொரு மரமும் 22க்கு 22 அடி இடைவெளி உள்ளது. அதிக தண்ணீர் தேவையில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்சுவேன். மே முதல் ஜூலை வரை பழங்களை பறிக்கிறோம்.
நாவல் மரத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டு நல்ல விளைச்சலும், அடுத்து ஆண்டு அதில் பாதி மட்டுமே கிடைக்கும். ஒரு கிலோ ரூ.150 க்கு விற்கிறோம். சென்னை பசுமை அங்காடிகளுக்கு அனுப்புகிறேன். எங்கள் பண்ணையில் “நாவல் ஜூஸ்’ தயாரிக்கிறோம். 700 மி.லி., ஜூஸ் பாட்டிலை ரூ.170 க்கு விற்கிறோம். ஆண்டிற்கு குறைந்தது ரூ.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும், என்றார்.

இயற்கை முறை கத்தரி சாகுபடி

இயற்கை மற்றும் உயிர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கத்தரி சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
உடல் நலனை பாதிக்காத, சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு விவசாயிகளுக்கு இருக்கிறது. விஷத்தன்மையற்ற விளை பொருள்களை விளைவிப்பதன் மூலம், நோயற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவை விஷமாகி, பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கக் கூடிய சூழல் இப்போது நிலவுகிறது.
விஷத்தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகளைப் புறக்கணித்து, இயற்கை மற்றும் உயிர்ரக மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், கத்தரி, விஷத்தன்மை சேர்வதைத் தடுக்கலாம்.
கத்தரியில் தண்டு மற்றும் காய் துளைப்பான், இலை பேன், மாவுப்பூச்சி, எபிலாக்னான் பொறி வண்டு ஆகியவை தாக்கும்.
தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை, கத்தரி செடியின் வேர்ப்பகுதியில் வைத்து, மண் அணைப்பு செய்தல் அவசியம்.
காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைக்க வேண்டும். இதில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விளக்கு எரிக்க வேண்டும். இதனால் தாய்ப் பூச்சிகள் விளக்கொளியால் கவரப்பட்டு, விளக்கில் சிக்கி இறக்கும். விளக்குப் பொறி ஒன்றின் விலை ரூ.100. மேலும், இனக் கவர்ச்சி பொறியை ஒரு ஏக்கருக்கு 5 வீதம் வைக்க வேண்டும். இதன் விலை ரூ.125.
முட்டை பருவத்தை அழிக்க, டிரைக்கோகிராமா கைலோனிஸ் எனும் ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 2 சிசி எனும் அளவுக்கு பயன்படுத்த வேண்டும். இதில் ஒரு சிசி ஒட்டுண்ணி விலை ரூ.20.
பூ பூக்கும் பருவத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். கத்தரிக்கு உள்ளே புழு தாக்கினால், பெவேரியா பேசியானா எனும் உயிர்ரக பூஞ்சாண மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் வீதம் கலந்து, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
விசைத் தெளிப்பானாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரும், கைத்தெளிப்பானாக இருந்தால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரும் பயன்படுத்த வேண்டும். இலைப்பேன் தாக்கினால், 4 நாள்கள் புளித்த 2 லிட்டர் மோரில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால் இலைப்பேன் கொட்டிவிடும். இதன் பயனாக, செடியில் பல புதிய துளிர்களும் வரும்.
மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 40 மில்லி மீன் எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.தாக்குதல் மிக அதிகமாக இருந்தால், வெர்டிசிலியம் லீகானி எனும் உயிர்ரக பூஞ்சாணத்தை ஒரு லிட்டர் நீரில் 4 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
எபிலாக்னான் பொறி வண்டு, இலையில் துளை போடும். அப்போது ஒரு ஏக்கருக்கு 12 கிலோ சாம்பலை ஆற்று மணலுடன் கலந்து, இலை மீது அதிகாலையில் தூவ வேண்டும். கரி, நிலக்கரி, அரிசி உமி என எந்த சாம்பாலாக வேண்டுமானாலும் இருக்கலாம். சாம்பலில் உள்ள சிலிக்கானை சாப்பிடுவதால், வண்டின் பல் உடைந்து, அவை இறந்து போகும்

உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி

திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஏக்கருக்கு 9 குவிண்டால் உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி பற்றி கூறுகிறவதாவது. 100 அடி நீளம், 9 அடி அகலம், 3 அடி ஆழம் கொண்ட குழியெடுத்து, மாட்டுக் கொட்டகையிலிருந்து வரும் கழிவுநீர்க் குழாயை அந்தக் குழியில் அணைத்திருக்கிறார். அந்தக் குழியின் கரைகளில் கொட்டாரப் பந்தல் அமைத்து,  அதில் அவரை, புடலை போன்ற கொடிகளை நிழலுக்காகப் படரச் செய்துள்ளார். இந்தக் கொடிகள் உதிர்க்கும் இலை, தழைகள் குழியில் விழுந்து கொண்டே இருக்கின்றன. இதோடு, துளசி ஆடுதொடா இலை, வேம்பு உள்ளிட்ட இலை, தழைகளையும் இதில் கொட்டுகிறார். சாணம், மூத்திரம் எல்லாம் ஒன்றாகக் கலந்து, உரக்குழியாக மாறியிருக்கிறது. பயிர்களுக்கான தண்ணீரை.
“ஒன்றரை ஏக்கர்ல உளுந்து விதைச்சுருக்கேன். மொத்தத்துக்கும் உரக்குழி தண்ணிதான் பாசனமாயிட்டிருக்கு. இந்த உளுந்துச் செடியில இலைகள் அடர்த்தியாகவும், அகலமாகவும் இருக்குறதுனால களைகளே இல்ல. ஒரு செடிக்கு சராசரியா 20 கிளைகளும், மொத்தம் 150 முதல் 200 காய்களும் பிடிச்சிருக்கு. விதைச்சு 50 நாட்களுக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் பூச்சி, நோய்த் தாக்குதல் கொஞ்சம்கூட இல்ல.
இதுவே ரசாயன முறையில உளுந்து சாகுபடி செஞ்சப்ப, 25ம் நாள் அசுவணித் தாக்குதல், 35-ம் நாள் மஞ்சள் நோய் தாக்குதல், இலைச் சுருட்டுப் புழுத் தாக்குதல், 40-50 நாட்கள்ல காய்ப்புழுத் தாக்குதல்னு தொடர்ச்சியா பூச்சிமருந்து அடிச்சுக்கிட்டே இருப்போம். விதைச்ச 25-ம் நாள், ஒரு ஏக்கருக்கு ஒண்ணரை மூட்டை டி.ஏ.பி. போடுவோம். 35-ம் நாள் மற்றும் 60-ம் நாள் தலா ரெண்டு லிட்டர் டி.ஏ.பி. கரைசல் தெளிப்போம். ஆனாலும், விளைச்சல் சுமாராதான் இருக்கும் . ஒரு செடிக்கு அதிகபட்சம் 100 காய்கள்தான் இருக்கும். அதிலும்கூட 15 பொக்கையா இருக்கும். அதிகபட்சம் ஏக்கருக்கு 6 குவிண்டால் கிடைச்சதுதான் பெரிய மகசூல்.
இயற்கை உரக்குழி வழியா தண்ணி பாய்ச்சி, உளுந்து சாகுபடி செய்யத் தொடங்கினேன். இதுல, ஒரு தடவை மட்டும்தான் களையெடுக்கற செலவு. அடுத்தது அறுவடைதான் (ரசாயன முறையில் இரண்டு தடவை களை எடுக்க வேண்டும்). உரக்குழி மூலமா போன வருஷம் சாகுபடி செஞ்சப்ப, ஒரு செடிக்கு 140-170 காய்கள் இருந்துச்சு. ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை மகசூல் கிடைச்சுது. இந்த வருஷம் அதைவிட அதிகமாக கிடைக்கும்னு தோணுது. ஒரு செடிக்கு 200 காய்கள் வரைக்கும் இருக்குறதுனால கண்டிப்பா 12 குவிண்டால் மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். இது ரசாயனத்துல விளைஞ்சது பசுமையே இல்லாம காய்ஞ்சு கிடக்கு. இலைகள் அடர்த்தியா இல்லாம, அதிகமாக களை  மண்டிக் கிடக்கு. மஞ்சள் நோய் தாக்குதல், இலைச்சுருட்டுப்புழுத் தாக்குதலும் அதிகமா இருக்கு. என் வயல்ல ஆடுதுறை 5 ரக உளுந்தை ஏக்கருக்கு 12 கிலோ விதைச்சேன். என் வயல்ல இருக்கற, அதே மண்கண்டம்தான் (செம்மண், மணல் கலந்த மண்) இங்கயும் இருக்கு.

இயற்கை முறையில் தழைச்சத்து தயாரிக்கும் முறை

தழைச்சத்து என்பது மனிதர்களுக்கு புரதச்சத்து போன்றது. பயிரின் வளர்ச்சிக்கு தழைச்சத்து மிக முக்கியமானது. செயற்கை உரத்தில் யூரியா தழைச்சதிற்கு பயன்படுத்தபடுகிறது. இபொழுது இயற்கை முறையில் எப்படி தழைச்சத்து நிறைந்த உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் 5 கிலோ சாணம், 3 லிட்டர் மாட்டுச் சிறுநீர், அரை
கிலோ வெல்லம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து மூடிவைத்து, நொதிக்கவிட
வேண்டும். இன்னொரு பாத்திரத்தில், நன்கு கனிந்த 15 வாழைப்பழம், கால் கிலோ
வெல்லத்தை ஒன்றாகக் கலந்து நொதிக்கவிட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து,
இந்த இரண்டு கலவைகளையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க
வேண்டும். இதனுடன் தலா ஒரு கிலோ ரைசோபியம், அசோஸ்பைரில்லம்,
பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் (இந்த உயிர் உரங்களின் விலை மிகவும்
குறைவு. அருகில் உள்ளா வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்)
ஆகியவற்றையும் கலந்து, ஒரு நாள் இரவு நொதிக்கவிட வேண்டும்.
இந்தக் கரைசல், தோசை மாவு பதத்துக்கு மாறி இருக்கும். இதோடு இரண்டு கிலோ
கடலைப் பிண்ணாக்கு கலந்து சில மணிநேரம் வைத்திருந்தால், ஈரப்பதம்
உறிஞ்சப்பட்டு, புட்டுப் பதத்துக்கு மாறிவிடும். இதை, ஒரு ஏக்கர் நெல்
வயலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில்
நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரத் தொடங்கி
விடும்.
இந்த இடுபொருளை, ‘மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல்’ என அழைக்கிறோம்.
இதற்குப் பதிலாக, இன்னும் எளிய முறையில் அக்கம்பக்கத்தில் கிடைக்கக்கூடிய
இலைதழைகளைக் கொண்டேகூட இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப் பாகவும்
ஊட்டச்சத்து கொடுக்கலாம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி
விரட்டியாகவும் பயன்படும்.
இதைத் தயாரிக்க, தலா 5 கிலோ வேம்பு, புங்கன், நொச்சி, நெய்வேலி
கட்டாமணக்கு, ஆடாதொடை இலைகளை ஒன்றாகக் கலந்து, அவை மூழ்கும் அளவுக்கு
தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு, ஆறவைத்து வடிகட்டி
மூன்று லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் கலக்கவேண்டும். இக்கரைசலில் இருந்து
இரண்டு லிட்டர் எடுத்து, 26 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்குத்
தெளிக்கலாம்.

பருத்தியில் இயற்கை வேளாண்மை

பருத்தி இந்தியாவின் மிகவும் முக்கியமான இழைப்பயிர் ஆகும்.இது வேளாண்மை மற்றும் தொழில்துறை பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத பங்கினை வகிக்கிறது இது ஜவுளி தொழில்துறையின் முதுகெலும்பாக உள்ளது. கணக்கீட்டின் படி 70% நுகர்வு ஜவுளி துறையிலும் 30 சதவீதம் நாட்டின் ஏற்றுமதியிலும் உள்ளது. இதன் வர்த்தகம் ரூ.42,000 கோடிகளாகும்.இந்தியாவின் பருத்தி விவசாயம் 8.9 மில்லியன் ஹெக்டரில் நடைபெறுகிறது. இது உலகளவில் அதிகமான பரப்பளவாகும்.மேலும் இது உலக பரப்பளவில் 25% மற்றும் ஏழு மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.
அங்கக பருத்தி வேளாண்மையின் நன்மைகள்
அ)சுற்று சூழலுக்கு இணக்கமான தொழில்நுட்பம்
  • மரபு வழி வேளாண்மையில் அதிகப்படியான இரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதினால் வேளாண் சுற்று சூழலின் அனைத்து அங்கங்களும் மாசு அடைகிறது.அங்கக பருத்தி உற்பத்தியில் அனைத்து இடுபொருட்களும் இரசாயனம் சாராத பொருட்கள்.மேலும் இவை சுற்றுப்புற சீர்கேடுகளின் பாதிப்புகளை குறைக்கிறது.
  • நூல்இழைகளில் பூச்சி மருந்துகள் படிந்திருப்பதினால் உபயோகிப்பாளர்களுக்கு பக்க விளைவுகளை உண்டாக்கும்.இயற்க்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அங்கக வேளாண்மையில் இயற்கையான நோய் கட்டுப்பாட்டு முறைகளை கையாளுவதாலும் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை.
  • ஜவுளி தொழிற்சாலைகள் மற்றும் சாயப் பட்டறைகளினால் அதிக அளவில் வெளியிடப்படும் சுத்திகரிக்காத மற்றும் மறு சுழற்சி செய்யப்படாத கழிவுநீர் மனிதர்களுக்கு உடல்நல குறைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, கால்நடைகள் மற்றும் ஆறுகள்,கால்வாய்களிலுள்ள மீன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இருப்பினும் இத்தகைய மாசுபட்ட நீரை பருத்தி பயிர்களின் பாசனத்திற்க்கு உபயோகப்படுத்துவதினால் மகசூல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது.
  • மண்ணில் உள்ள நன்மை செய்யும் உயிர்களை பாதிப்பதினால் மண் வளம் பாதிக்கப்படுவதுடன், பருத்தியில் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்க்கையான ஒட்டுண்ணிகள் மற்றும் பறவையினங்களின் எண்ணிக்கையை குறைத்து சமநிலையை பாதிக்கிறது. அங்கக வேளாண் சுற்றுப்புற சூழல்களின் பல்வேறு அங்கங்களை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதின் மூலம் இயற்கை சமநிலைக்கு உதவுகிறது.
ஆ) உற்பத்தி செலவுகளை குறைக்கிறது
நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள் பருத்தி உற்பத்தியில் செலவு – ஆதாய விகிதத்தை குறைக்கிறது.ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா,போன்ற மாநிலங்களின் விவசாயிகள் மிக அதிகப்படியான உற்பத்தி செலவுகளால் பருத்தி விவசாயத்தில் குறைந்தபட்ச லாபத்தினைக் கூட பெற முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.மற்றொருபுறம் அங்கக வேளாண்மை கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறது மேலும் பண்ணை உள்ள வளங்களை பயன்படுத்துவதினால் இது செலவுகளை மேலும் குறைக்கிறது.
இ) பூச்சிக்கொல்லி எதிர்ப்புத்திறன் மேலாண்மை
பருத்தியில் நோய்களை தடுப்பதற்காக தொடர்ச்சியாக தீங்கு விளவிக்கும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதினால் பூச்சிகள் அதிக எதிர்ப்ப திறன் பெற்று விடுவதினால் தொடர்ந்து அதிக முறை பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டியுள்ளது இவைகள் உற்பத்தி செலவுகளை அதிகப்படுத்துகிறது.அங்கக வேளாண்மை இந்த முறைக்கு எதிர் மாறானது.பருத்தியில் அங்கக வேளாண்மை முறையினை பின்பற்றுவதற்காக ஏராளமான பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் ஆதாரமாக உள்ளது.
பருத்தியில் அங்கக வேளாண்மைக்கான அனுகுமுறையில் இராசயன மருந்துகள் இல்லத ஒரு முறையான அங்கக வேளாண்மை பருத்தி உற்பத்தியில் முதன்மையான இடம் பெறுகிறது.இந்த விவசாய முறையில் கவனத்துடன் மூலக்கூறுகள் அங்குள்ள வளங்கள்,வேளாண் சூழ்நிலை சிறப்பியல்பகள் மற்றும் சமூக பொருளாதார கட்டமைப்பு போன்ற தகவல்களை கொண்டு பொருத்தமான முறைகள் உருவாக்கப்படுகின்றன. அவை கீழ்க்கண்டவாறு.
1.இடத் தேர்வு
அங்கக வேளாண்மைக்கு கடுமையான மண்ணரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களும்,வருடம் முழுவதும் களைகள் நிறைந்துள்ள நிலங்களும் பயனளிக்காது.அங்கக வேளாண்மை என்பது நடைமுறையில் உள்ள சாகுபடி முறைகளை புறக்கணிப்பதோ அல்லத மாறுபட்டதோ அல்ல,எனவே வளம் குறைந்த மண்ணை நன்கு வளப்படுத்திய பிறகே அங்கக வேளாண்மையை கடைபிடிக்க முடியும்.
2. ரகத்தை தேர்வ செய்தல்
அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகங்கள் இராசயன உரஙக்களக்கே அதிக விளைச்சலை தரக்கூடியது அங்கக வேளாண்மைக்கு உகந்தது அல்ல,பாரம்பரியமான மற்றம் அங்கக வேளாண்மைக்க பொருத்தமான ரகங்களை தேர்வு செய்யவும்.நோய் எதிர்ப்புதிறன் மிக்க ரகங்கள் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். குறைவான வயதுடை ரகங்கள் ஓரளவிற்கு ஏற்புடையது மேலும் காய்புழு தாக்குதலும் பாதிப்பும் குறைவும்.
3. நடவு மற்றும் விதை அளவு
அமிலத்தில் நனைக்கப்பட்ட விதைகளை சர்வதேச விதிமுறைகளின்படி (1 FOAM) பயன்படுத்த கூடாது.அங்கக சாகுபடியில் உற்பத்தியில் செய்யப்பட்ட இழைக்காக சான்றிதழ் பெறமுடியாது.இருப்பினும் அங்கக வேளாண்மையின் மூலம் சாகுபடி செலவுகளை குறைத்து இலாபத்தை அதிகரிக்க விவசாயிகள் அமில நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை உபயோகித்து விதையின் மூலமாக பரவக்கூடிய நோய்களை தவிர்த்து தரமான பயிர் வளர்ச்சியை பெறமுடியும்,விதை நேர்த்தி செய்யப்பட்டாத விதைகளை பயன்படுத்தும் பொழுது சரியான பயிர் எண்ணிக்கையை பெற முடியும்,விதை நேர்த்தி செய்யப்படாத விதைகளை பயன்படுத்தும் பொழுது சரியான  பயிர் எண்ணிக்கையை பெற அதிக அளவிலான விதைகளை பயன்படுத்த வேண்டியிரக்கும் ஒரு ஹெக்டரில் 75×15 செ.மீ இடைவெளியில் 25 கிலோ விதைகளை பயன்படுத்தும் பொழுது 85 லிருந்து 90 ஆயிரம் செடிகளை ஒரு ஹெக்டரில் பெற முடியும். இரண்டு வரிசை பருத்தி செடிகளின் நடுவே ஒரு வரிசை தீவனதட்டை பயிரினை நடவு செய்ய வேண்டும். இது பருத்தி செடி பூப்பதற்கு முன்பாக செய்யப்பட வேண்டும்.
4) உரமிடுதல்
சரியான உற்பத்தியை பெற, மண்வளத்தை பராமரிப்பதும் படிப்படியாக உயர்த்துவதும் அவசியம். பருத்தியில் அங்கக சாகுபடிக்கு மண்ணின் அங்கக சத்துக்களை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் மிகவும் முக்கியமானது. இவைகள் மண்ணின் பெளதிக தன்மையை அதிகிரிக்கிறது, மண்ணின் கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது மேலும் சத்துக்களை அளிப்பதையும் மேம்படுத்துகிறது. இதற்கு அதிக அளிவலான தொழுவுரங்களை இடுவதன் மூலம் பருத்தி பயிருக்கு தேவையான சத்துக்களை கிடைக்கச் செய்யலாம். பொதுவாக தொழுவுரங்களை இல்லாத பொழுது பல்வேறு வகையான உயிர் உரக் கலவைகளை உபயோகிக்கலாம். இயற்கை உரங்களான (தொழுஉரம், கலப்புஉரம், மண்புழுஉரம்) பசுந்தாள் உரங்கள், தானிய பயிர்கள் மற்றம் உயிர் உரங்கள் உடன் மண்வளத்தை திரும்ப பெற ஏதுவான பயிர் சுழற்சி முறைகள் ஆகியன மண்வளத்தை பராமரிக்கும் அங்கங்களாகும்.
அ) தொழுவுரம்
தொழுவுரம் 15 டன் /ஹெக்டர் என்ற அளவில் நடவுக்கு முன்னர் நிலத்தில் இட்டு நன்கு கிளரி விட வேண்டம். தொழுவுரம் நன்கு மக்கியதாக இருக்க வேண்டும். மேலும் உயிர் உரமான டிரைகோடர்மா விரிடியுடன் கலந்து இருப்பது சிறப்பு. வருடங்களில் மண்வளம் மேம்படுத்தப்பட்டவுடன் இந்த அளவை 5-10 டன்/ஹெக்டருக்கு  என்ற அளவில் படிப்படியாக குறைக்கலாம்.
ஆ) தீவனதட்டைப்பயிர்
நடவு செய்த 40 நாட்களுக்கு பிறகு பசுந்தாள் பயிர்களுடன் தீவன தட்டைபயிரை நடவு செய்ய வேண்டும்.இது பயிர் வளர்ச்சி பருவத்தின் பொழுதும்,பயிர் பூக்கும் தருணத்திலும் பருத்தி பயிருக்கு தேவையான தழைச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.இது மண்ணில் நுண்ணுயிர் பெருக்கத்தையும் துரிதப்படுத்துகிறது.கறைசலைக் கட்டுப்படுத்தி இயற்கை நோய் கட்டுப்பாட்டு அமைப்பினை மேம்படுத்துகிறது. சாகுபடியின் மூலம் 400-500 கிலோ/ஹெக்டர் காய்ந்த சருகுகளுடன் 2.5% தலைச்சத்து மற்றும் 10-12 கிலோ/ஹெக்டர் தலைச்சத்துக்களை கொடுக்கிறது. இதன் மூலம் கூடுதல் நன்மைகளாக களைக் கட்டுப்பாடு,மண் அரிப்பினை தடுத்தல்,மற்றும் பருத்தியின் நோய்களுக்கு இயற்கையான பாதுகாப்பினை ஏற்படுத்துதல் ஆகியன பெறப்படுகிறது.
இ) தக்கை பூண்டு
தக்கை பூண்டு பார்வை பருத்தி தோட்டத்தை சுற்றிலும் இரண்டு மீட்டர் அகலத்தில் வளர்ந்து நட்ட 65-70 நாட்களில் அறுவடை செய்து பருத்தி செடியின் வரிசைகளுக்கு இடையே பரப்பும் பொழுது இது பயிர் தண்டு வளர்ச்சிக்கு தேவையான தலைச் சத்தினை அளிக்கிறது.மேலும் தண்டுகள் விரைவில் மக்க கூடியவை.மேலும் மண்ணின் ஈரப்பதம் அழிவதையும் தடுக்கிறது.
ஈ) மண்புழு உரம்
தொழுவுரத்துக்கு மாற்றாக மண்புழு உரத்தினை 1.2 டன் /ஹெக்டர் என்ற அளவில் நடவு வரிசைகளின் போட்டு நடவு செய்ய வேண்டும். மண்புழு உரம் பல்வேறு நுண்ணூட்டங்களுக்கு அடித்தளமானது. மேலும் இது பயிர் வளர்ச்சிக்கு தேவையான மைக்ரோ புளோரா என்னும் அமிலத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மண்ணின் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் ஏதுவாக அமைகிறது.
உ) உயிர் உரங்கள்
நடவின் பொழுது விதைகளை அசிட்டோ பாக்டர் அல்லது அசோஸ்பியரில்லம் 200 கிராம் / ஏக்கர் என்ற அளவில் கலந்து விதைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
5) கலப்பு உரத்திற்கான தொழில்நுட்பங்கள்
1. மண்புழு உரம்
சுயசார்புடைய பசுந்தாள் உரங்கள் மற்றும் தொழுவுரம்  ஆகிய மண்ணின் அங்ககத் தன்மையை அதிகரிக்கும் காரணிகளாகும்.இருப்பினும் சி சூழ்நிலைகளுகடகு இவைகளால் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய முடிவதில்லை.ஏராளமாந மண்ணின் கழிவுகள் மற்றும் தாவர பொருட்கள் வெருமனே எரிக்கப்படுகின்றன. இதற்காக  பண்ணைக் கழிவுகள் மற்றும் தாவர பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் உபயோகப்படுத்த முடியும். நவீன கருத்துக்களின் அடிப்படையில் மண்புழுக்கள் மற்றும் பூஞ்சானங்கள் இந்த சுழற்சிக்கு பயன்படுகின்றன.இந்திய மண்புழு இனத்தை சேர்ந்த எசேனியா புடிடா என்ற இனம் பண்ணைக்கழிவுகளை ஒருமாத காலத்தில் மண்புழு உரமாக மாற்றிவிடுகிறது. மேலும் பாலிதீன் தவிர மற்றவைகளை மக்கச் செய்துவிடுகிறது.
மண்புழு உரம் தயாரிக்க 15-25 செமீ உயர படுக்கையினை தயார் செய்ய வேண்டும். இந்த படுக்கையின் நீள அகலம் பண்ணைக் கழிவுகளில் கிடைப்பதை பொருத்து அமைத்துக் கொள்ளலாம். இந்த படுக்கைகள் நடுவில் உயர்ந்தும் பக்கவாட்டில் சரிவாக இருக்குமாறும், (வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக) கூடுமானவரை நிழலில் இருக்குமாறும்அமைத்துக்கொள்ள வேண்டும். மண்புழுக்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை. அதனால் படுக்கைகளை மூடி வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.மேலும் இருளானது மக்கும் காலத்தைக் குறைக்கிறது.
படுக்கையின் மூதல் அடிக்கில் லேசான பொருட்களான கோதுமை/சோயபீன் தோலினை அடுக்கவும். பின் சாண கரைசலை லேசாக தெளிக்கவும்.
ஒரு கிலோ மண்புழுக்களை 10 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் உள்ள படுக்கையில் விடவும். இதற்கு மண்புழு முட்டைகள் அல்லமு மண்புழு உரத்தில் உள்ள கரிய மண்புழுக்களையே உபயோகப்படுத்தலாம். களைகள், நறுக்கிய இலை, தழைகள், பண்ணைக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள்ி மற்றும் மற்ற மக்க சுடிய பொருட்கள் அனைத்தையும் இந்த படுக்கையின் மீது போட்டுக் கொள்ளவும். இந்த படுக்கையை லேசான ஈரப்பதம் இருக்குமாறு அடிக்கடி நீரை தெளித்து வர வேண்டும். ஆனால் நனைந்து விடக் கூடாது. இதற்கு உகந்த ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை (27-330செ) மக்க எடுத்துக் கொள்ளும் காலம் 40-50 நாட்கள். மண்புழுவின் எச்சத்தில் தோராயமாக 1.2-1.4% மணிச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இந்த சத்தக்கள் படுக்கை மற்றும் மக்க வைக்கப்படும் பொருட்களை பொருத்து மாறுபடும். மண்புழுவின் எச்சத்தில் அது எடுத்துக்கொள்கின்ற பொருட்களைவிட தழைச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளது.
ஆ) பருத்தி செடியின் தண்டுகளை டிரைக்கோடெர்மா விரிடியின் மூலம் மக்கச் செய்வது
பருத்தி அறுவடை முடிந்ததும் அதன் தண்டுகள் விறகிற்காக எரிக்கப்படுகின்றன. இந்த தண்டுகளுடன் இதர பயிர்களின் பண்ணைக்கழிவுகள் மற்றும் களைகள் போன்றவற்றை டிரைக்கோடெர்மா விரிடி போன்ற புஞ்சாணங்களைக் கொண்டு சிறப்பான முறையில்  மக்கச் செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் சிஜிசிஆர் நாக்பூர் அறிமுகப்படுத்தியது. இதன் விவரம் பின்வருமாறு: 10x2x1 மீட்டர் என்ற அளவில் குழியை தயார் செய்ய வேண்டும். இதில் 2 ஹெக்டர் அளவில் உள்ள காய்ந்த பருத்தி குச்சிகளை நான்கு அடுக்கலாக அடுக்க வேண்டும்.
இந்த தண்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப லேசான பண்ணை கழிவுகளான சோள தட்டைகள், கொடிகள், சோயாபீன் போன்றவை கொண்டு நிரப்ப வேண்டும். (பருத்தி செடியின் தண்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப) மற்றும் 50 கிலோ சாணமட (இது ஆரம்ப நிலையில் பூஞ்சாணங்கள் பெருக உதவி புரியும்) ஒவ்வொரு அடுக்கிலும் 60 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி தூள் மற்றும் அரைக் கிலோ வெல்லம் மற்றும் 15 கிராம் ஈஸ்ட் புவுடரை கலந்து தெளிக்க வேண்டும். இந்த குழியை சணப்பை செடியின் தண்டுகளான கொண்டு மூட வேண்டும். இது நீர் ஆவியாவதை தடுக்க உதவும். குழியில் தேவையான ஈரப்பதம் நிலவ அடிக்கடி தண்ணீரை தெளிக்க வேண்டும். குழியில் உள்ளவை நன்கு மக்கிய பின்னரே குழியை திறக்க வேண்டும்.
இதற்க நான்கு மாக காலம் தேவைப்படும் பிறகு பெரும்பாலான பருத்தி தண்டுகள் மக்கிவிடும். மற்றவை (20%) மட்டுமே கருப்பாக பகுதி மக்கிய நிலையில் காணப்படும். இந்த மக்கிய உரமானது நன்கு மக்கிய மண்புழு உரத்திற்கு சமமானது. இது நுண்ணோட்ட மறுசுழற்சிக்கும்  உதவுகிறது மற்றும் மண்ணில் உள்ள சில நோய் கிருமிகளையும் அழிக்கிறது.
6) களை மேலாண்மை
அங்கக வேளாண்மையில் நிலத்தில் கோரை, அறுகம்புல், ஏறுலை போன்ற நிரந்தரமான களைகளை கட்டுப்படத்தாவிடில் அங்கக வேளாண் முறையில் கட்டுப்படுத்துவது கடினம். இருப்பினும் இத்தகைய களைகளின் வேர்கள், கிழங்குகள் போன்ற மண்ணுக்கு அடியுள்ளவற்றை கோடையில் உழவின் போது வெளிப்படுபவற்றை கையினால் அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு இயந்திரங்களைக் கொண்டோ அல்லது மனிதர்களைக் கொண்டோ களைகளை அப்புறப்படுத்தலாம். இந்த களைகளை மக்க வைப்பதன் மூலம் மறுசுழற்சி செய்து தொழுவுரமாக பயன்படுத்தமுடியும். ஆனால் இந்த களைகள் நிரந்தரமான களைகள் என்பதால் முழுவதுமாக மக்க வைத்தே பின்பே தொழுவுரமாக பயன்படுத்தப்பட வேண்டும். தட்டைப் பயிறினை இரண்டு வரிசை பருத்திச் செடிகளுக்கு நடுவே வளர்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்த முடியும்.
7) சுழற்சி முறையினை தேர்ந்தெடுத்தல்
மண்வளத்தைப் பாதுகாக்கவும் மற்றும் நோய் தாக்குதல் மற்றும் களைகளை கட்டுப்படுத்தவும் பயிர்சுழற்சி முறை அவசியமானதாகும். அதிக சத்துக்களை எடுத்துக்கொள்கின்ற பயிர்களை தவிர்த்து அந்த பகுதிக்கு ஏற்ற பயிர்வகைப் பயிர்களை தவிர்த்து அந்த பகுதிக்கு ஏற்ற பயிர்வகைகளைப் பயன்படுத்தலாம்.
8) பயிர் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு யுக்திகள்
பயிர் பாதுகாப்பு முறைகள் நோய்களின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கின்றன. பருத்தியின் அங்கக வேளாண் முறைகளுக்கு உகந்ததான இயற்கையான பாதுகாப்பு முறைகளான பூச்சிகளை உண்டும் பூச்சிகளான சர்சோ பேர்லா அல்லது அபர்ஆடாசர்சா போன்றவைகளின் ஒட்டுண்ணி முட்டைகளான டிரைகோடெர்மா ஒட்டுண்ணி பூச்சிகளான ஹப்ரோபரகோன் அல்லது உயிர்கொல்லி உயிரினங்களான ஹெகவோபா, ஆர்மிகாராஈ என்.வி.பி மற்றும் பாக்டிரியும், போகிலாஸ் கிரிங்யுஞ்சாஸ்வர் குறுஸ்டகி கலவைகள் பறவையினங்களின் உபயோகப்படுத்துவது  மற்றும்  தாவர பூச்சிக் கொல்லிகளான வேம்பு பொருட்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தலாம்.
இயற்கை கட்டுப்பாடு முறைகளை உபயோகிக்கும் பொழுது பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. இது பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்கும். இயற்கை கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிக்க முதலில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பதை தவிர்க்க வேண்டும். இலைகள் பூச்சிகளை அழிப்பதோடு மட்டுமின்றி நன்மை செய்யும் உயிரினங்களயும் அழிக்கிறது. மேலும் மனிதர்களுக்கும் ஏற்றதல்ல. கீழ்கண்ட பயிர் நோய் கட்டுப்பாட்டு முறைகள் பருத்தியின் அங்கக வேளாண்மைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.
  1. தகுந்த நோய் எதிர்ப்பு இரகங்களை தேர்வு செய்யவும்.
  2. கிரைபேர்லா 500-1000/ஹெக்டர் என்ற அளவில் பூச்சிகளின் பாதிப்புகளின் அளவைப் பொறுத்துவிட வேண்டும். பின்பு 20-25 நாட்களுக்கு ஒருமுறை பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப விட வேண்டும்.
  3. தண்டினை துளைக்கும் புழுக்களை அழிக்கும். முட்டைகளை கொல்லும் டிரைகோசார்டஸ் @ 5/ஹெக்டர் என்ற அளவில் 40-50 நாள்விட வேண்டும். பின்பு 10-12 நாட்களில் மறுபடியும் விட வேண்டும்.
  4. அமெரிக்கன் தண்டுப் புழு தோன்றும் பொழுது ஹெ-என்.பி.வி ரூ.250 கரைசல் அல்லது எல்இ 200 கோடி (109) போலி இன்குளுசன் பாடிஸ் அல்லது பாலி அக்குளுசன் பாடில் சை தெளிக்கவும். சிறந்த கட்டுப்பாட்டு முறைகள் அமைய அதனை 15 நான் இடைவெளிகளில் தெளிக்கவும். இதை மாற்ற பயிர்களுக்கும் மாற்று கட்டுப்பாட்டு முறையாக ரூ. 1.51/ ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
  5. பூக்கள் மற்றும் இலைகள் மற்றும் தண்டுகளை தாக்கும் புழுக்கழள அழிக்க ஹெப்புரோரொகான் ஹெபிடோடர்யை விட வேண்டும். இவைகளால் சிறந்த கட்டுபாட்:டு சூழலை ஏற்படுத்த முடியும்.
  6. ஒரு ஹெக்டரில் 3-6 பறவைகள் அமரும் மர கொம்புகளை நட்டுவைப்பதன் மூலம் பறவைகளின் வரவு அதிகரித்து பூச்சிகளின் தாக்குதல் குறையும்.
  7. வேம்பு சார்ந்த தாவர பூச்சிக் கொல்லிகள், கொட்டை சாறு 5% லி/லி அல்லது எண்ணெய் 1% தெளிப்பது பயிரை தாக்கும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும்.
  8. பூச்சிகளின் நடமாட்டத்தை கவனிப்பதால் கவர்ந்து இழுக்கும் பொறிகளைக் கொண்டு காய்ப்புழுக்களை கவர்ந்து அழிக்க முடியும்.
  9. மற்றொரு முக்கியமான நடைமுறை தொழில்நுட்பமான பருத்தி பயிரினை 30 நாட்கள் தாண்டிய பின்னரும் வளர்ப்பது காய்புழுக்களின் முட்டைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

களையை கட்டுப்படுத்த நிழற்போர்வை

தர்மபுரி மாவட்டத்தில், நிலங்களில் களையை கட்டுப்படுத்த, விவசாயிகள் நிழற்போர்வை அமைக்க, ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, தக்காளி, மா, கரும்பு, துவரை, பருத்தி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், காய்கறி பயிர்கள் மற்றும் மலர் சாகுபடி முக்கிய பங்கு வகித்து வருகிறது.பட்டன் ரோஸ், சாமந்தி, சம்மங்கி, கோழிக்கொண்டை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்கள் குறிப்பிட்ட பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
மலர் சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைத்து வந்த போதிலும், களை எடுத்தல், பூச்சி கொல்லி மருந்து உள்ளிட்டவைகளுக்கு, அதிக செலவு செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.இதை தடுக்க, பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், பசுமை குடில் மூலம், மலர் செடிகளை வளர்த்து வருகின்றனர்.
பல விவசாயிகள், களை மற்றும் நிலங்களில் இருந்து, தண்ணீர் அதிகளவு உறிஞ்சப்படுவதை தடுக்க, விவசாய நிலங்களில், நிழற் போர்வை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ஆலிவாயன்கொட்டாயை சேர்ந்த விவசாயி வேடியப்பன் கூறியதாவது:
  • தர்மபுரி மாவட்டத்தில், சில ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்ததால், விவசாய கிணறுகளில் நீர் மட்டம் குறைந்தது. இதனால், விவசாயிகள் கிணறுகளை ஆழப்படுத்தி வருகின்றனர்.
  • சில விவசாயிகள், குறைந்த தண்ணீரில், விவசாய பயிர்களை சாகுபடி செய்ய, சொட்டு நீர் பாசனம் அமைத்து வருகின்றனர்.
  • பட்டன் ரோஸ் உட்பட பல்வேறு மலர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, மலர் செடிகளுக்கு, தென்னை நார் கொட்டியும், அதன் மீது பாலிதீன் கவர் மூலம் நிழற் போர்வை அமைத்து வருகின்றனர்.
  • விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையுள்ள நிலையில், நிழற்போர்வை அமைப்பதன் மூலம், களைகளை கட்டுபடுத்த முடிகிறது.
  • ஒரு ஏக்கர் பட்டன் ரோஸ் செடிகளுக்கு நிழற் போர்வை அமைக்க, 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தோட்டக்கலைத்துறையினர், நிழற் போர்வை அமைக்க தேவையான, பாலிதீன் கவர்களை, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
  • இதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதால், பெரும்பாலன விவசாயிகள், இலவசமாக பாலிதீன் கவர்களை வாங்க முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.